அம்மா தாயே பாலாமபிகையே
அகிலம் போற்றும் மூகாம்பிகையே
தஞ்சம் என்று சரணடைந்தால்
தாமதமின்றி காப்பவளே (அம்மா)
விதியின் வினைகள் நீக்கிடுவாய்
பிறவி பலனை தந்திடுவாய்
துன்பம் அனைத்தும் போக்கிடுவாய்
க்ண்ணின் இமைபோல் காத்திடுவாய் (அம்மா)
உலகம் காக்கும் உமையவளே
தொழுதுநின்றேனே அனுதினமே
தஞ்சம் என்றே தவிததிருந்தேன்
தந்தருள்வாய் என்றும் அடைக்கலமே (அம்மா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக