வெள்ளி, 23 டிசம்பர், 2011

ஹரஹர சிவ சிவ அம்பலவாணா

ஹரஹர சிவ சிவ அம்பலவாணா
அம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர ) 
ஆனந்த தாண்டவ நடராஜா
நடராஜா நடராஜா
நர்த்தன சுந்தர  நடராஜா
சிவராஜா சிவராஜா
சிவகாமி  ப்ரிய சிவராஜா
சித்சபேசா  நடராஜா
சிதம்பரேசா  நடராஜா(ஹரஹர)

ஜெகஜ் ஜெனனீ சதுர்வேத விலாசினி

ஜெகஜ் ஜெனனீ சதுர்வேத விலாசினி
சாம்பவி மோஹினி மாதா பவானி
ஸ்ரீஹரி சங்கரி மோக்ஷப்ரதாயினி
ஜெயஜெய ஜெய ஜெய வந்தினிமா
ஜெய பரமேச ஹ்ருதய வாசினிமா
ஆதி சக்தி பரப்ரம்ம ஸ்வரூபிணி (ஜெகஜ்)

தேவி துர்க்கா தசபுஜ தாரிணி

தேவி துர்க்கா தசபுஜ தாரிணி
தானவ தைத்ய துஷ்ட சம்ஹாரிணி (தேவி)

பகவதி பாரதி பவபய ஹாரிணி
மாதமகேஸ்வரி மங்கள கரிணி
ராஜராஜேஸ்வரி கிரிஜபவானி (தேவி) 

வருவாய் வருவாய் வருவாய் அம்மா

வருவாய் வருவாய் வருவாய் அம்மா
திருவே உருவாய் வருவாய் அம்மா
இருளை நீக்கிட வருவாய் அம்மா-மன
இருளை நீக்கிட வருவாய் அம்மா
உந்தன் அருளைப் பொழிந்திடு தாயே அம்மா (வருவாய்)

கல்யாணி கருமாரி காமாட்சி நீயே
மஹாலக்ஷி மாதங்கி மீனாக்ஷி நீயே
வரலக்ஷ்மி வாராய் விசாலாக்ஷி நீயே
உலகாளும் மாயே தனலக்ஷ்மி தாயே
அம்மா அம்மா அம்மா அம்மா (வருவாய்)

ஜெயஜெய ஜெயதேவி நாராயணி

ஜெயஜெய ஜெயதேவி நாராயணி
ஜனன மரணபய ஹாரிணி (ஜெய)

துக்க வினாசினி ஜெகத் பரிபாலினி
ஜெயஜெய ஜெயதேவி ஜெகத் ஜனனீ
ஜெக ஜெனனீ சுபகரிணி (ஜெய)

அம்மா அம்மா அம்மா

அம்மா அம்மா அம்மா
எனக்கபயம் அளிப்பாய் அகிலாண்டேஸ்வரி (அம்மா)

சிம்ம வாஹினி ஸ்ரீலலிதே பவானி
நம்பினோரைக் காக்கும் நிர்மல வதனி (அம்மா)

மங்கள நாயகி மதுரை மீனாக்ஷி
திங்களை சுடிடும் தேவி ஸ்ரீகாமாக்ஷி
கங்கை நதிக்கரையில் காசி விசாலாக்ஷி
இங்கு நீ வரவேண்டும் எனக்கு கொடு காட்சி (அம்மா)

உமையவளே அருள் புரிவாயம்மா

உமையவளே அருள் புரிவாயம்மா
ஓம்கார ரூபிணி அகிலாண்ட நாயகி (உமை)

அடியார்கள் வினை தீர்க்கும் ஆதிபராசக்தி
நான் செய்த பிழைகள் எல்லாம் பொறுப்பாய் அம்மா (2)
ஜெகதம்பிகே சிவரஞ்சனி (உமை)

ஸ்ரீசக்ர வாசினி தேவி நமஸ்தே

ஸ்ரீசக்ர வாசினி தேவி நமஸ்தே
சிவகாம சுந்தரி தேவி நமஸ்தே
ஸ்ரீகிருஷ்ண சோதரி தேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி தேவி நமஸ்தே

பத்ம தள லோசனி தேவி நமஸ்தே
பக்த பரி பாலினி தேவி நமஸ்தே
பர்வத வர்த்தினி தேவி நமஸ்தே (ராஜ)

கருணாவிலாசினி தேவி நமஸ்தே
கார்த்தியாயினி தேவி நமஸ்தே
கதம்பவன வாசினி தேவி நமஸ்தே (ராஜ)

சக்தி பரமேஸ்வரி தேவி நமஸ்தே
சம்புவன மோஹினி தேவி நமஸ்தே
சங்கரி மனோகரி தேவி நமஸ்தே (ராஜ)

அன்னபுர்ணேஸ்வரி தேவி நமஸ்தே
அகிலாண்ட நாயகி தேவி நமஸ்தே
அபயப்ரதாயினி தேவி நமஸ்தே (ராஜ)


ஞாயிறு, 18 டிசம்பர், 2011

என் மனதில் துள்ளி துள்ளி விளையாட வா
கண்ணா வா கண்ணா நீ ஓடோடி வா (என் மனதில்)


கொஞ்சும் சலங்கை ஒலியில் நெஞ்சை அள்ளும் பார்வையில்
கொஞ்சம் எனனைக் காணவா கொஞ்சிக் கொஞ்சி பேசவா
விளையாட வா விளையாட வா குழலோடு வா குழலோடு வா
கண்ணா வா கண்ணா நீ ஓடோடி வா (என் மனதில்)


குறுகுறுக்கும் மலர்விழியில் குறுநகையும் புரிந்து வா
முறுவலிலே உயிரையே முற்றும் கொள்ளை கொள்ளவா
விளையாட வா விளையாட வா எனை ஆள வா எனை ஆள வா கண்ணா நீ ஓடோடி வா (என் மனதில்)

சனி, 17 டிசம்பர், 2011

கணபதி ஓம் ஜெய கணபதி ஓம்

கணபதி ஓம் ஜெய கணபதி ஓம் (2)
முருகனின் முதல்வா மாயோன் மருகா
அருள் தர வருவாய் திருவடி சரணம்
கணபதி என்றிட கவலைகள் மாறிடும்
கருணை பெருகிடும் கல்நெஞ்சம் உருகிடும்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்திர
வாமன ரூப மகேஸ்வர புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே

திங்கள், 5 டிசம்பர், 2011

பஜனை செய்வோம் வாருமே

பஜனை செய்வோம் வாருமே (2 )
பரமசிவ நாமம் சொல்லி பஜனை செய்வோம் வாருமே
காலத்தை வீணாக்கிடாமல் பஜனை செய்வோம் வாருமே
சீலத்தோடு சிவனை எண்ணி பஜனை செய்வோம் வாருமே

நீற்றானை நினைவில் வைத்து பஜனை செய்வோம் வாருமே
கூற்றுவன் நினைவகல பஜனை செய்வோம் வாருமே

சித்பொருளை சத்பொருளை பஜனை செய்வோம் வாருமே
சிதம்பரத்தில் நடனமிடும் பஜனை செய்வோம் வாருமே

பண்ணின்மிசை ஆனவனை பஜனை செய்வோம் வாருமே
எண்ணி எண்ணி இப்பொழுதே பஜனை செய்வோம் வாருமே

வெள்ளி, 2 டிசம்பர், 2011

அம்மா தாயே பாலாம்பிகையே

அம்மா தாயே பாலாமபிகையே
அகிலம் போற்றும் மூகாம்பிகையே
தஞ்சம் என்று சரணடைந்தால்
தாமதமின்றி காப்பவளே (அம்மா)

விதியின் வினைகள் நீக்கிடுவாய்
பிறவி பலனை தந்திடுவாய்
துன்பம் அனைத்தும் போக்கிடுவாய்
க்ண்ணின் இமைபோல் காத்திடுவாய் (அம்மா)

உலகம் காக்கும் உமையவளே
தொழுதுநின்றேனே அனுதினமே
தஞ்சம் என்றே தவிததிருந்தேன்
தந்தருள்வாய் என்றும் அடைக்கலமே (அம்மா)

சின்ன சின்ன முருகா முருகா

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (2)
சிந்தையிலே வந்து ஆடும் (2)
சீரலைவாய் முருகா முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

எண்ணமதில் திண்ணமதாய் (2)
எப்போதும் வருவாய் அப்பா
ஏற்றி உன்னை பாடுகின்றேன்
ஏரகத்து முருகா முருகா முருகா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

அப்பனுக்கு உபதேசித்த (2)
அருமை குருநாதனுமாய்
சுவாமி மலையில் அமர்ந்தவனே
சுவாமிநாத குருவே அப்பா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

பாலும் தேன் அபிஷேகமும் (2)
பக்தர்களின் காவடியும்
பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
பரங்கிரி தேவனாகி
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

அகங்காரமும் ஆத்திரமும் (2)
அகந்தைகளை விட்டு விட்டு
அடைக்கலமாய் ஓடி வந்தேன்
ஆறுமுக வேலவனே
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

முக்திக்கு வழிதேடிய (2)
முதியோரும் இளைஞர்களும்
மலைகள் எல்லாம் ஏறி வந்தோம்
மாதவன் பால் மருகனே வாவா
சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

பாடல் காணொளி

அம்மா தாயே கலைவாணி

அம்மா தாயே கலைவாணி
அனுக்ரஹம் செய்யவே வருவாய் நீ
இமமாநிலத்தின்இனிமை எல்லாம்
இருக்குது நாவின் அசைவினிலே

அம்மா தாயே கலைவாணி
அனுக்ரஹம் செய்யவே வருவாய் நீ
சரஸ்வதி தாயே கலைவாணி
வாழ்வில் சந்ததம் அருள்வாய் நீ (அம்மா)

சத்குருநாதனே வா வா வா

சத்குரு நாதனே வா வா வா
சச்சிதானந்தனே வா வா வா
சர்வதயாளனே வா வா வா
சத்யகுரு நாதனே வா வா வா
ஓம்குரு நாதனே வா வா வா
ஓம்கார ரூபனே வா வா வா
என்குருநாதனே வா வா வா
எங்கள் குலதெய்வமே வா வா வா (சத்குரு)

திங்கள், 28 நவம்பர், 2011

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்



பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் (2)
ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் (பிள்ளையார்)

மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார் (பிள்ளையார்)

அவல் பொரிகடலையும் அரிசி மாவு கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார் கஷ்டங்களை போக்குவார் (பிள்ளையார்)

வன்னி மரத்தின் நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்தின் நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

கலியுகத்து விந்தைகளைக் காண வேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார் (பிள்ளையார்)

ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)


இந்த பாடலை இங்கே கேட்டு பாடுங்கள்