பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் (2)
ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார் (பிள்ளையார்)
அவல் பொரிகடலையும் அரிசி மாவு கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார் கஷ்டங்களை போக்குவார் (பிள்ளையார்)
வன்னி மரத்தின் நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்தின் நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
கலியுகத்து விந்தைகளைக் காண வேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார் (பிள்ளையார்)
ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
இந்த பாடலை இங்கே கேட்டு பாடுங்கள்